Monday, March 06, 2006

37.ஆயிரம் பூவிதழ்கள்

மெழுகு.*


ஆயிரம் பூவிதழ்கள்
அர்ச்சதையாய் என் மீது
வீழ்ந்த போதும்
நான் அசையாமல்
அப்படியே மணமேடையில்
அமர்ந்திருந்தேன்.


ஆனால்


என் அன்பே!
உன் இரண்டே பூ இதழ்கள்
என் மீது பட்டவுடன்
நான் ஏன் மெழுகாகிப் போனேன்???


--
என்றும்
நட்புடன்
விகே.பெரியசாமி.


பூஜ்யம் என்பது வெறுமையல்ல
அதுதான் வெற்றியின் முதல் படி!. - வெறும்
புள்ளிகள் என்பது முடிவும் அல்ல
அதுதான் தொடக்கத்தின் வாசல் படி!


முதலடி வைக்கப் பயந்துவிட்டால்
இமயம் எப்படி ஏறுவது? - ஒரு
புள்ளியை வைத்துத் தொடங்காவிட்டால்
கோலங்கள் எப்படி போடுவது??


முதலடி வைத்து எழுந்திடு மகனே!
உலகம் உந்தன் காலடியில்! - அந்த
அகரம் எழுதிப் பழகிடு மகனே!
உலக மொழிகள் உந்தன் விரலிடையில்!!


தொடக்கம் இன்றி வெற்றிகள் இல்லை
துணிவுடன் எதையும் தொடங்கிவிடு! - மனத்
திடத்துடன் உளியைக் கையில் எடுத்து
பாறைகளைச் சிலை யாக்கிவிடு!!


வாழ்க்கையைக் கண்டு அஞ்சிவிடாதே
ஒவ்வொரு படியாய் ஏறிவிடு! - அந்த
உயரத்தைக் கண்டு பயந்து விடாதே
பருந்தெனப் பறந்து வானைத் தொடு!!!
--
என்றும்
நட்புடன்
விகே.பெரியசாமி.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4