Saturday, March 04, 2006

32.நடிகன் இன்று மாறியாச்சு

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் எங்கள் கண்மணி அரங்கர் எழுதிய கவிதை

நடிகன் என்று மாறியாச்சு
பவுடர் பூசிப் பூசிக் கூச்சம்போச்சி"

ன்னு நம்ம கொங்கு நாட்டு அண்த்தே சொல்வாரு.

ஆனா இது நம்ம பெர்யா அண்த்தே செவாலியே சிவாஜி கணேசனை மன்சுல நென்ச்சிக்கின்று அவர் எற்ந்த கால்த்துக்குப் பக்த்தால எய்துனது.

நேபகப் பட்த்தும்படிப் படுத்துகிறேன்..:)

================================================


நடிகன்
----------

சிலைகள் அரிதாரம் பூசி,
சித்திரங்கள் நடந்தாற் போல்,

மெல்லச் சிரித்து, மெதுவே மூச்சுவிட்டு,
ஓங்கிக் குரலெடுத்து, ஒய்யாரமாய் நடந்து,
வீங்கிய சொற்களோடு, விண்ணதிர நடந்து,

அழுது புலம்பி, ஆர்ப்பாட்டம் பலசெய்து,
முகத்தினுள் நுண்ணுணர்வுகள் பலகாட்டி,

காண்போர் உருவெல்லாம் காட்டும்
கண்ணாடிபோல்,

மனத்தகத்து மலிந்த உணர்வுகளின்
உருவங்களை
மாறாது காட்டி,

மனது ஒரு நிலை நின்று,

தானென்ப தறத் தன்னை மறந்து

வேற்றுமுகம் பல காட்டி

நிகழ்வுகளில் நிலைத்து நிற்கும்
நன்னயமுடையவன்
நடிகன்.

06.06.2001.

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4