Thursday, April 20, 2006

பா.ஜ.கவில் பேன்டேஜ் பாண்டியன் - செல்வன்

மாலை நேரம் ஆனவுடன் பேன்டேஜ் பாண்டியன் அப்படியே காற்று வாங்க வெளியே போனார்.பா.ஜ.க அலுவலகமான கமலாலயம் கண்ணில் தெரிந்தவுடன் அப்படியே மெதுவாக உள்ளே நுழைந்தார்.

"வாங்க பாண்டியன் இப்ப தான் கண் தெரிஞ்சதா,பெரிய கட்சிகளை கண்டுக்குவீங்க,எங்களை எல்லாம் விட்டுடுவீங்க" என அட்டகாசமாக சிரித்தபடி நம்மை வரவேற்றார் இல.கணேசன்.

"எலெக்ஷன் வேலை எப்படி போகுது?" என கேட்டார் பாண்டியன்.

"அதை ஏன் கேக்கறிங்க?234 தொகுதிக்கும் ஆள் புடிக்கறதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு.என்னை கேட்டா 10 அல்லது 12 தொகுதிக்கு மேல இருக்க கூடாதும்பேன்.வேட்பாளர் பிரச்சனைய கூட எப்படியோ சம்மளிச்சுடலாம்னு வையுங்க.ஆனா ஒவ்வொரு வேட்பாளருக்கும் 10 பேர் முன்மொழியணும்னு சொல்றாங்க.2340 பேருக்கு நாங்க எங்க போறது?" என கவலையுடன் சொன்னார் கணேசன்.

"அப்புறம் என்ன தான் பண்ணீங்க?" என கேட்டார் பாண்டியன்.

"ஒவ்ப்வொரு தொகுதில இருக்கற கோயிலுக்கு டூர் வர்ராங்க பாருங்க வடநாட்டுக்காரங்க.அவங்களை கூட்டி வந்து சமாளிச்சோம்" என உற்சாகமாக சொன்னார் கணேசன்."இதுல காமடி என்னன்னா ஒரு 4 அல்லது 5 தொகுதிக்கு ஆளே கிடைக்காம திண்டாடிட்டு இருந்தோம்.வசமா ஒரு சேட்டு மாட்டினாரு.வேட்பு மனுவை முன்மொழிய கையெழுத்து போடுங்கன்னு சொல்லி வேட்புமனுவிலயே கையெழுத்து வாங்கிட்டோம்.தமிழ் தெரியாம அவரும் கையெழுத்து போட்டு வேட்பாளராயிட்டார்" என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.

"அட பாவமே.2 தொகுதிக்கு மேல கையெழுத்து போட்டா மனு தள்ளுபடியாயிடுமே?" என அனுதாபத்துடன் சொன்னார் பாண்டியன்.

"ஆகட்டும்.அப்படி தள்ளுபடி ஆனா அதை வெச்சே ஒரு அனுதாப அலையை உருவாக்கிட மாட்டோமா என்ன?" என்றார் கணேசன்.

அவர் நிஜமாகவே சொல்கிறாரா இல்லை ஜோக் அடிக்கிறாரா என்பதை பாண்டியனால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

"உங்க கூட்டணில மொத்தம் எத்தனை கட்சி?" என கேட்டார் பாண்டியன்.

"யாருக்கு தெரியும்?கிட்டத்தட்ட தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை லெட்டர் பேட் கட்சிகளும் எங்க கூட்டணில தான் இருக்குன்னு வையுங்களேன்" என்றார் கணேசன்.

"இத்தனை பேரை எப்படி புடிச்சீங்க? என்று கேட்டார் பாண்டியன்.

"நாங்க விஞ்ஞான முறையில தான் எல்லாத்தையும் அணுகுவோம்.கூட்டணி பத்தி பேச ஒரு பெரிய டீமே போட்டோம்.டீம் மெம்பருங்க எல்லாம் தமிழ்நாட்டுல இருக்குற அத்தனை பிரின்டிங் பிரஸ்சுக்கும் போய் லட்டர் பேட் ஆர்டரை எல்லாம் வாங்கி பாத்து கட்சிகளோட் அட்ரஸ்,போன்நெம்பர் விவரத்தை தொகுத்து அவங்களை புடிச்சு கூட்டணில சேத்தோம்.இத்தனை பிரின்டிங் பிரஸ்சுக்கு போய் கடசில என்ன ஆச்சுன்னா பிரின்டிங் பிரஸ் சங்கத்தையே அரசியல் கட்சியா மாத்தி அவங்ககளுக்கு "அச்சு"றுபாக்காம் தொகுதிய ஒதுக்கிட்டோம்" என பெருமையுடன் சொன்னார் கணேசன்.

"பெரிய சாதனை இல்ல பண்ணிருக்கீங்க" என்றார் பாண்டியன்.

"சும்மாவா? லெட்டர் பேட் கட்சிகளை வச்சு யாராவது பி.கெச்டி பண்ணணூம்னா எங்க கிட்ட அனுப்புங்க.எத்தனை சுவாரசியமான தகவல்கள் இருக்கு தெரியுமா?" என்றார் கணேசன்.

"கொஞ்சம் எடுத்து விடுங்களேன்" என்றார் பாண்டியன்.

"தமிழ்நாட்டில் முதல் கட்சி ராஜராஜ சோழன் காலத்தில் உத்தரமேரூர் தேர்தலில் போட்டியிட்ட 'தஞ்சை குடியானவர் கழகம்'.தலைவர் சோழகுலாந்தக பெருவழுதி.துவக்கப்பட்ட வருடம் கிபி965" என்றார் கணேசன்.

"இவங்களும் உங்க கூட்டணில இருக்காங்களா? என்ன" என்றார் பாண்டியன்.",

"பின்ன விடுவமா?சாண்டில்யன், கல்கி, இப்படி பல சரித்திர நாவல்களை படிச்சு இந்த கட்சி இருக்குற ஆபிசை கண்டுபிடிச்சு....அதெல்லாம் ஒரு பெரிய கதை" என்று பெருமூச்சு விட்டார் கணேசன்.

"சரி.பிரசார சுற்றுப்பயன திட்டம் எல்லாம் தீட்டியாச்சா?" என்றார் பாண்டியன்.

"ஓ" என்றார் கணேசன்."12ம் தேதி கொடைக்கானல்,13ம் தேதி ஊட்டி,14தேதி ஏற்காடு,15ம் தேதி குற்றாலம்,16ம்தேதி பவானிசாகர் டேம்,17ம் தேதி வைகை அணை,19ம் தேதி வைதேகி நீர்வீழ்ச்சி.." என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.

"என்னங்க.எல்லாம் ஜாலிடூர் அடிக்கிற இடமா இருக்கு?தேர்தல் பிரச்சார பயணம் மாதிரி தெரியலையே" என்றார் பாண்டியன்.

"ரொம்ப நாளா வீட்டுல கொழந்தைக இந்த இடமெல்லாம் பாக்கணும்னு சொல்லிட்டிருந்தாங்க.கோடைகாலத்துல ஸ்கூல் வேற லீவு.சரின்னு பிரச்சார பயணத்தையும் கோடை விடுமுறை சுற்றுப்பயணத்தையும் ஒண்ணா மிக்ஸ் பண்ணிட்டேன்.பிரச்சாரம் பண்ண மாதிரியும் ஆச்சு,டூர் போன மாதிரியும் ஆச்சு" என உற்சாகத்துடன் சொன்னார் கணேசன்.

"சரி வந்தது வந்தீங்க.ஒரு வேட்புமனுவில கையெழுத்து போடக்கூடாதா" என்றார் கணேசன்.

அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார் பாண்டியன்."

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4